நோயாளிகளின் உறவினர்களுக்கு உதவிய அதிமுக எம்.எல்.ஏ

சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம்  கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை முன்பு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்,பிஸ்கட்டுகள், குடிநீர் பாட்டில்கள் மற்றும் முகக் கவசங்களை வழங்கினார்.

இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா பரிசோதனைக்காகவும், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறவும் வந்து செல்கின்றனர்.

தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் காலை 10 மணிக்கு மேல்  அனைத்து மளிகை கடைகளும் மூடப்படுகின்றன. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சிங்காநல்லூர் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர் ஜெயராமனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சென்ற கே.ஆர்.ஜெயராமன் அங்கு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம், பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் குடிநீர் பாட்டில்களை வழங்கினார்.

மேலும், மருத்துவமனை வளாகம் முன்பு தற்காலிக குடில் அமைத்து, முதற்கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு மேற்கண்ட பொருட்கள் வழங்கப்படும் என்றும், தினமும் இந்த பொருட்கள் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.