தொப்புள் கொடி கடவுள் கொடுத்த ஒரு அற்புதப் பரிசு

தொப்புள் கொடி என்பது நமக்கு  ஒரு தாய் ஒன்பது மாதம் முடிந்து குழந்தையை பெற்றெடுத்த உடன் தாயின் நச்சுக் கொடியில் இருந்து குழந்தையின் தொப்புள் கொடி பிரித்தெடுக்கப்படுகிறது.

அறிவியல் கூற்றுப்படி கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள் தான்.  தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் பொழுது அதன் மூலமாகவே குழந்தைக்கு ஊட்டச்சத்துக்கள் செல்கின்றது. அறிவியலின் கூற்றுப்படி ஒரு மனிதன் இறந்த மூன்று மணி நேரத்திற்கு தொப்புள் வெதுவெதுப்பாக தான் இருக்குமாம். முழுமையாக ஒரு குழந்தை உருவாவதற்கு 270 நாட்கள் அல்லது ஒன்பது மாதங்கள் ஆகின்றது. உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தொப்புளுக்கு பின்னால் 72 ஆயிரத்துக்கும் அதிகமான நரம்புகள் உள்ளன.

நம் தொப்புளில் சிறிது எண்ணைய்  விடுவதன் மூலம் நரம்புகள் வறட்சி அடைவது தடுக்கப்படுகிறது. இதனால் கண்கள் வறட்சி, கண் குறைபாடு, குதிகால் மற்றும் உதடு வெடிப்பு, முகப் பொலிவினை, மூட்டுவலி, நடுக்கம், உடல் வலி, முழங்கால் வலி, வறண்ட சருமம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கின்றது. தினமும் 3 ஸ்பூன் கடுகு எண்ணையை தொப்புளில் விட்டு  தொப்புளை சுற்றி பரவ விடவும். இதன் மூலம் பல நன்மைகள் நமது உடம்பிற்கு கிடைக்கின்றது.

தொப்புளில் எண்ணெய் விட  எந்த நரம்பில் ரத்தம் வரண்டு உள்ளதோ அதனை உங்கள் தொப்புளில் கண்டுபிடிக்க இயலும். அதனால் தொப்புளை அந்த எண்ணையை சிறிது விடுவதன் மூலம் வறண்ட நரம்புகள் அனைத்தும் திறக்கப்படுகிறது. சிறு குழந்தைக்கு வயிற்றுவலி என்றால் பெரியவர்கள் காய பொடியுடன் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவுவது வழக்கம். சில நிமிடங்களில் வயிற்றுவலி குணமாகும்.

குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை ஒரு குப்பில் அடைத்து அதனை தாயத்தாக அந்த குழந்தையின் உடலில் கட்டிவிடுவார்கள். இதிலும் ஒரு அறிவியல் உள்ளது. இதனை நிரூபிக்கும் விதமாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் உடல் உள்உறுப்புகள் ஏதேனும் பாதிக்க பட்டால் அதனை அவர்களின் தொப்புள் கோடி திசுக்களால் சார் செய்ய முடியும் என்று கூறியுள்ளனர். அறிவியல் பூர்வமாக மனிதனுக்கு கடவுள் கொடுத்த பரிசு தொப்புள் கொடி.