கோவையில் ஆக்சிஜன் கிடைக்க கண்காணிப்புக் குழு –  மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் மருத்துவ மனைகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க சிறப்பு கண்காணிப்புக் குழுவை மாவட்ட ஆட்சியர் ஏற்படுத்தி உள்ளார்.

சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர்  எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் கோவை மருத்துவமனைகளிலும்  ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து திரவ ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டாலும் பற்றாக் குறை கூறவில்லை. இதன் காரணமாக ஆக்சிசன் தேவையால் வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வருதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழு ஏற்படுத்தி மாவட்ட ஆட்சியர்  நாகராஜன் நேற்று (05.05.2021)உத்தரவிட்டுள்ளார்.

சுகாதாரத்துறை இணை இயக்குனர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், மாநகர போலீஸ் சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனர், மண்டல போக்குவரத்து அலுவலர், சென்ட்ரல், கோவை வடக்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர், மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் ஆகியோர் இந்த கண்காணிப்பு குழுவில் இடம்  பெற்றுள்ளனர்.

இக்குழுவின் செயல்பாடுகள் :

கோவை மருத்துவமனைகளில் உள்ள மொத்த ஆக்ஸிஜன் படுக்கையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் தினமும் தேவைப்படும் ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றை கணக்கீடு செய்வர். இதுதவிர மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் தடையின்றி கிடைப்பது. தேவையான ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு மருத்துவமனைகளுக்கு தடையின்றி ஆக்ஸிஜன் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பர்.