வெறிச்சோடி காணப்படும் மீன் அங்காடி

இரண்டு நாட்கள் மீன், மற்றும் இறைச்சிகடைகள் செயல்படாது என்ற அறிவிப்பை தொடர்ந்து கோவையில்   மீன் அங்காடிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

நாடு முழுவதும் கொரானாவின் இரணடாம் அலை வேகமாக பரவிவரும் நிலையில் அரசு பல்வேறு நோய்தடுப்பு வழிமுறைகளை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக இரவு ஊரடங்கு மற்றும் அனைத்து ஞாயற்று கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று  சனிக்கிழமை மே 1,  அரசு விடுமுறை என்பதாலும், நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் இரண்டு நாட்கள் மீன் மற்றும் இறைச்சி கடைகளை திறக்க அரசு தடைவிதிதுள்ளது. இதனால் கோவை உக்கடம் பகுதியில் செயல்பட்டு வரும் சில்லறை விற்பனை மீன் அங்காடி விடுமுறை அளித்ததால் வெறிச்சோடி காணப்பட்டது.

இது குறித்து  மீன் வியாபாரி கூறுகையில்: மீன் விற்பனையை பொருத்தவரை கோவையில் ஒருநாளைக்கு சுமார் 10 இலட்சம் ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படுவதாகவும், மேலும் விசாகப்பட்டினம், மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து தினமும் கோவைக்கு 25 கண்டைனர்களில் மீன் வந்துகொண்டு இருப்பதாக தெரிவித்தார்.