பழனியாண்டவர் கோவில் தமிழ் திருக்குட நன்னீராட்டு விழா

கோவை, கணபதி பகுதியில் அமைந்துள்ள பழனியாண்டவர், விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவில் தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (25.4.2021) அன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு அவர்களது தலைமையில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர், இந்நிகழ்ச்சியில் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசுகையில், கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணியுமாறும் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் அனைவரும் அவர்களது வீட்டில் இருந்தபடியே எல்லாநாளும் விளக்கேற்றி கொரோனா என்ற இருளை அகற்றுவோம் என்றார்.