விஎல்பி கல்லூரியில் தென்னிந்திய அளவில் கால்பந்து போட்டி

விஎல்பி கலை அறிவியல் கல்லூரியில் தென்னிந்திய அளவிலான “FUTSAL” 4ம் ஆண்டு கால்பந்து கோப்பைக்கான போட்டி இன்று (05.01.2018) தொடங்கியது.    மாணவர்களுக்கான இப்போட்டி தொடர்ந்து இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் தலைவர் சூரியகுமார் தொடக்க உரையாற்றினார். உடற்கல்வித்துறை இயக்குனர் கோல்டா வரவேற்புரையாற்றினார்.

கல்லூரி முதல்வர் ராஜ்குமார் மற்றும் ஏராளமான மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட உள்ளது.