பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் : தி.மு.க பொறுப்பாளர் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை சுந்தராபுரம் காந்திநகர் பகுதியில் உள்ள அண்ணாவின் சிலைக்கு கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 98வது டிவிசன் பகுதியில் நடைபெற்ற இதில், குறிச்சி வடக்கு பகுதி பொறுப்பாளர் காதர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் சேனாதிபதி, தி.மு.க.தலைவர் செல்லும் இடங்களில் பொதுமக்களின் அமோக வரவேற்பு இருப்பதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார். இதில் 100 வது வார்டு வட்ட செயலாளர் மேட்டூர் மாணிக்கம், குறிச்சி ஜெகதீஷ், பாலாஜி, நிர்மல் குமார், விவின், மேட்டூர் கார்த்தி, ப்ரவீண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.