ராமகிருஷ்ணா கல்லூரியில் தீண்டாமைக்கு எதிராக உறுதி மொழி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (29.01.2021) அன்று தீண்டாமைக்கு எதிராக உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.

நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்க மாட்டோம் என்ற உறுதி மொழியை ஏற்றனர். இந்நிகழ்வினை கல்லூரியின் என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர்களான பிரகதீஸ்வரன், சுபாஷினி, நாகராஜன் ஆகியோர் முன்னின்று நடத்தினர் .