பா.ஜ.க கோவை மாநகர் மாவட்ட பட்டியல் அணி சார்பாக 500 பேருக்கு அண்ணதானம்

கோவை ஒண்டிப்புதூர் எ.அர்.எஸ் மஹாலில் பா.ஜ.க கோவை மாநகர் மாவட்ட பட்டியல் அணி சார்பாக நடைபெற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவில் 10000 பேருக்கு இலவச ஆயுள் காப்பீடு வழங்குதல், 70 தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து கவுரவிக்கும் விழா மற்றும் 500 பேருக்கு அண்ணதானம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் முன்னிலையில் வகித்தார். பட்டியல் அணியின் கோவை மாநகர் மாவட்ட தலைவர் ஜெ.சி.விவேக் தலைமையில் தாங்கினார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஏகத்துவ ஜமாத்தின் தலைவர் வேலூர் இப்ராஹிம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் பிரீமியர் பிரபாகரன், மகேஷ்வரி  நாராயணன், கண்மணி பாபு பட்டியல் அணியின் மாவட்ட பொதுச்செயலாளர்கள் கப்பல் சதீஷ், மகேந்திரன், மாவட்ட பொருளாளர் முத்துகுமார், சந்திரா, ராஜேந்திரன், பழனிசாமி, செயற்குழு உறுப்பினர்கள் தவமணி, சந்திரன், ரெட் சுரேஷ் மற்றும் பட்டியல் அணியின் ஐடி பிரிவு செயலர் ரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.