கோவையில் 20 ஆயிரத்தை தாண்டிய குணமடைந்தோர் எண்ணிக்கை

கோவை மாவட்டத்தில் நேற்று 549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த சூழலில், இன்று 530 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 234ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்று 3 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, பலியானவர்கள் எண்ணிக்கை 368 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 364 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 20 ஆயிரத்து 264 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3 ஆயிரத்து 602 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.