விஞ்ஞானி பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு பிறந்த தினம்

நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய வேதியியலாளர் பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு 1853 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி லத்வியா நாட்டின் ரிகா நகரில் பிறந்தார்.

இவர் மின் வேதியியல், இரசாயன இயக்கவியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இத்துறையில் நீர்த்தல் விதியைக் கண்டறிய இவரது ஆராய்ச்சிகள் உதவின. இது ‘ஆஸ்வால்டு நீர்த்தல் விதி’ எனப்படுகிறது.

வினைவேக மாற்றம், இரசாயன சமநிலை மற்றும் எதிர்வினை இயக்க வேகம் குறித்த கண்டுபிடிப்புகளுக்காக 1909 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.

இயற்பியல், வேதியியல் துறையின் முன்னோடி என்று போற்றப்படும் வில்ஹெம் ஆஸ்வால்டு 1932 ஆம் ஆண்டு மறைந்தார்.