சூரசம்ஹார நிகழ்ச்சியினை காண குவிந்த பக்தர்கள்

இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான கந்த சஷ்டி விரதம் இன்று (25.10.17) பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோவில்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று மாலை நடைபெற இருக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சியினை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.