கோவையில் ஆண் மலட்டுத்தன்மை விகிதம் அதிகரிப்பு

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆண் மலட்டுத்தன்மையை அதிகரிக்கிறது

ஆண் மலட்டுத்தன்மை ஏற்பட முக்கிய காரணங்களாக கருதப்படுபவை : 

வாசக்டெமி அறுவை சிகிச்சை, தொற்றுக்குப் பின் ஏற்படும் விந்து வெளியேற்ற இடர்பாடுகள், வெரிகோசீல் (விந்துக் குழாய் சிரைச்சுருள், நாளப்புடைப்புப்புற்று), பாலியல் செயற்பிறழ்ச்சிகள்  

  • பெரியம்மை போன்ற கடுமையான தொற்றுகள்
  • அதீத மதுப்பழக்கம், புகையிலை பயன்பாடு, உடல் பருமன் போன்ற வாழ்க்கை முறை காரணிகள்
  • கோவையில் உள்ள நோவா-வில் மலட்டுத்தன்மைக்காக வரும் ஆண்களில் 32 சதவீதம் பேர் அதிக எடையால் மலட்டுத்தன்மை ஏற்பட்டவர்கள்.

35 சதவீதம் பேர் புகையிலைப் பயன்பாட்டால் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

 மலட்டுத் தன்மை என்பது பெண்கள் சார்ந்த விஷயம் என்ற ஒரு தவறான கருத்து பொதுவாக உள்ளது. கோவையில் 40 முதல் 45 சதவீத மலட்டுத்தன்மை ஆண்களுக்கு இருப்பது நமக்கு எச்சரிக்கையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. மேலும் பல இடங்களில் ஆண் மலட்டுத்தன்மை கண்டுபிடிக்கப்படுவதும் இல்லை, அதற்கு சிகிச்சை அளிக்கப்படுவதும் இல்லை. ஏனென்றால் குழந்தையின்மைக்கு பெரும்பாலும் பெண்கள் தான் காரணம் என்ற கருத்து நிலவுவதால் அவர்கள் மீது தான் அனைவரது பார்வையும் இருக்கும். மேலும் ஆண்கள் இந்த விஷயத்தில் யாரிடமும் ஆலோசனை பெற விரும்புவதில்லை. அத்துடன் கருத்தரிக்காததற்கு தாங்கள் தான் காரணம் என்பதை ஆண்கள் ஏற்றுக் கொள்ள தயங்குகின்ற மன நிலையில் உள்ளனர்.

 கோவை நோவா ஐவிஐ கருத்தரிப்பு நிபுணர்னு Dr. மீனாட்சி செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோவையில் தற்போது ஆண்மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் 29 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களிடம் இந்த குறைபாடு அதிகம் உள்ளது. ஆண் மலட்டுத்தன்மை பரம்பரை அடிப்படையில்வரக் கூடும். தொற்று, விதைப்பையில் காயம் உள்ளிட்ட சில மருத்துவக் காரணங்களாலும் ஆண் மலட்டுத்தன்மை ஏற்படக்கூடும்.  வயது, ஊட்டச்சத்து குறைபாடு, முறையான உடற்பயிற்சி இன்மை, வேலை பளு மற்றும் மன அழுத்தம், சுற்றுச் சூழல் பாதிப்பால் ஏற்படும் தாக்கம் போன்ற வாழ்க்கை முறை காரணங்களும் ஆண்களிடம் மலட்டுத்தன்மை ஏற்படக் காரணமாக அமைகின்றன. புகைபிடிக்கும் பழக்கம், சட்ட விரோத போதை மருந்து பயன்பாடு, மதுப்பழக்கம், உடல் பருமன், கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) உள்ளிட்டவையும் ஆண் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணங்களாக விளங்குகின்றன.என்றார்.

 ஆண் மலட்டுத்தன்மைக்கான பரிசோதனை எவ்வாறு நடத்தப்படுகிறது ?

 எந்த மலட்டுத்தன்மை பரிசோதனையாக இருந்தாலும் இரு பாலினரையும் பரிசோதிக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை அறிக்கைகள், உடல் பரிசோதனை, விந்து பகுப்பாய்வு உள்ளிட்டவற்றின் மூலம் ஆண் மலட்டுத்தன்மை கண்டறியப்படுகிறது. விந்தணுக்களின் எண்ணிக்கை, அவற்றின் தரம், நகரும் தன்மை, வீரியம் உள்ளிட்டவை குறித்து இந்த ஆய்வில் தெரிய வரும். மிகவும் குறைவான விந்தணுக்களின் எண்ணிக்கை கொண்ட ஆண்களுக்கு ஹார்மோன் பரிசோதனை, மரபணு பரிசோதனை உள்ளிட்டவை நடத்த தேவை ஏற்படக்கூடும். விந்தணுக்கள் இல்லாவிட்டால் விதைப்பைத்திசுப்பரி சோதனை (டெஸ்டிகுலர்பயாப்சி) செய்ய தேவை ஏற்படலாம். ஏதேனும் அசாதாரண நிலை கண்டறியப்பட்டால், ஹார்மோன்களின் நிலையை ஆய்வு செய்தல், டிஎன்ஏ-க்களின் நிலை குறித்த ஆய்வு, விதைப்பைநரம்புஸ்கேன் உள்ளிட்டவை செய்யப்படும். அதைத் தொடர்ந்து அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மூன்று மாதத்திற்கு பின்னர் மீண்டும் விந்து பரிசோதனை நடத்தப்படும்.

 தற்போது மருத்துவ ஆய்வு முறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் சிறிய காரணிகள் கூட தெளிவாக கண்டறியப்படுகிறது. இது முன்பு சாத்தியம் இல்லாமல் இருந்தது. பெண்ணை மட்டுமே நிரந்தரமாக குறை கூறாமல் பாதிப்பு உள்ள சரியான நபருக்கு சிகிச்சை அளிப்பதற்கு இந்த பரிசோதனை முறைகள் உதவுகின்றன. மலட்டுத் தன்மை மற்றும் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள தம்பதிகள் சரியான உதவியை நாடவேண்டியது அவசியம்.என்று கோவை நோவா ஐவிஐ கருத்தரிப்பு நிபுணர்னு Dr. மீனாட்சி மேலும் கூறினார்.

பெண் இனப் பெருக்க குறைபாடுகளுக்கு மகப்பேறு மருத்துவ நிபுணர் அல்லது பெண்கள் நல சிறப்பு மருத்துவரை அணுகலாம். ஆண்களுக்கு இந்த குறைபாடு இருந்தால் மலட்டுத்தன்மை சிகிச்சை மையங்களை அணுக வேண்டும். ஆண் மலட்டுத்தன்மைக்கான சிகிச்சை சாதாரண மாத்திரைகளில் இருந்து ஐயூஐ (விந்தணுக்களை நேரடியாக கருப்பைக்குள் செலுத்துல்), (சோதனைக் குழாய் குழந்தை) என மலட்டுத்தன்மையின் நிலையைப் பொறுத்து வேறு விதமான சிகிச்சைகள் மற்றும் தீர்வுகள் வழங்கப்படுகின்றன.

 இந்தியாவின் முன்னணி கருத்தரிப்பு மையங்களில் ஒன்றாக கோவை நோவா ஐவிஐ விளங்குகிறது. இங்கு இப்போது  முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையின் மூலம் விந்தணுக்களில் சிறந்த விந்தணுவை தேர்ந்தெடுக்க முடியும். மேக்ஸ் என்பது காந்த முறையில் ஆரோக்கியமான விந்தணுக்களை பிரித்தெடுக்கும் நடைமுறையாகும். இதன் மூலம் கருத்தரித்தல் விகிதம் அதிகரிக்கிறது. விரைவான கருமுட்டை பிளவு, கருதங்கும் விகிதம் அதிகரித்தல், பிரசவம் ஏற்படும் விகிதம், ஆரோக்கியமான குழந்தை பிறப்பு போன்றவற்றுக்கு இந்த முறை உதவுகிறது.

 நோவா ஐவிஐ பெர்டிலிட்டி பற்றி : நோவா ஐவிஐ பெர்டிலிட்டி நிறுவனம் கருத்தரித்தல் சிகிச்சை வழங்குவதில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஸ்பெயினின் ஐவிஐ – யுடன் இணைந்து நோவா நிறுவனம் இந்தியாவுக்கு அதிநவீன இனப்பெருக்க தொழில் நுட்பத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டு முயற்சி நோவா -வின் ஐவிஎஃப் சேவைகள் மற்றும் தொழில்நுட்பத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

 ஐருஐஇ ஐஏகு ஐஊளுஐஇ ஆன்ட்ராலஜி உள்ளிட்ட சேவைகளுடன் இந்திய தொழில்நுட்பத்திலான கருபதப்படுத்துதல் உள்ளிட்டவைகளையும் நோவா மேற்கொள்கிறது. பல்வேறு சிறந்த சிகிச்சை முறைகள் வழங்கப்படுவதால் பல முறை தோல்வி அடைந்த தம்பதிகளுக்கு கூட கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நோவா தற்போது இந்தியாவில் 19 மையங்களைக் கொண்டுள்ளது. அகமதாபாத் (2 மையங்கள்), பெங்களூர் (3 மையங்கள்), சென்னை, கோவை, ஹிசார், ஹைதராபாத், இந்தோர், ஜலந்தர், கொல்கத்தா, மும்பை (2 மையங்கள்) புதுதில்லி (2 மையங்கள்), புனே, சூரத், விஜயவாடா ஆகிய இடங்களில் நோவா மையங்களைக் கொண்டு செயல்படுகிறது.