நூல் வெளியீட்டு விழா

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இன்று (29.8.2020) சிந்தனை கவிஞர் கவிதாசனின் “வெற்றியே வா…” என்ற 75வது நூல் வெளியிட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்த நூலினை இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் வெளியிட பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் எஸ்.சித்ரா பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலர் பிரியா சதீஷ்பிரபு, முதன்மை செயல் அதிகாரி கருணாகரன், கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, நிர்வாக அதிகாரி சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.