விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு அரசு வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய அரசு வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து இந்து அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துராமலிங்கம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.