முகக்கவசத்துடன் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை

ஆகஸ்ட் 15-ம் தேதி நடக்கும் 74வது சுதந்திர தின விழாவையொட்டி வஉசி மைதானத்தில் நடைபெற உள்ள விழாவிற்காக காவல்துறையின் அனைத்து காவலர்களும் முகக்கவசம் அணிந்து அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் பங்கேற்று தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள உள்ளார். இதற்கான இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி கோவை போலீஸ் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இது காவல் ஆணையாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள், தலைமையில் தினந்தோறும் காலை மாலை வேளைகளில் ஒத்திகை நடைபெற்று வருகின்றது.

கொரோனா தொற்று காரணமாக அனைத்து காவலர்களும் முகக்கவசம் அணிந்தும், ஒன்றரை அடி இடைவெளி விட்டும் ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், தேசிய மாணவர்படை மாணவர்களின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் சுதந்திர தினத்தையொட்டி வஉசி மைதானத்தில் தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணியிலும், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.