விஸ்வ இந்து பரிஷத்தின் 56 வது ஸ்தாபக தினக்கொண்டாட்டம்

விஸ்வ இந்து பரிஷத்தின் 56 வது ஸ்தாபக தினத்தை முன்னிட்டு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில்  கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

விஸ்வ இந்து பரிஷத்தின் 56 வது ஆண்டை முன்னிட்டு நாடு முழுவதும் அதன் ஸ்தாபக தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிருஷ்ண ஜெயந்தி அன்று துவங்கப்பட்டதை தொடர்ந்து, கோவை ஆர்.எஸ்.புரம் கிளை சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் 56 வது ஸ்தாபக தின விழா பூமார்க்கெட் பகுதியில், ஆர்.எஸ் புரம் நகர தலைவர் பிரகாஷ் சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை தலைவர் ரவீந்திரன் மற்றும் மாநகர மாவட்ட சேவா அமைப்பாளர் திலீப் நபாரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட செயல் தலைவர் சிவலிங்கம் கலந்து கொண்டு கொடியை ஏற்றினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் விக்னேஷ், மனோஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.