தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி துணை ஆணைய‌ர் ஆய்வு

கோவை, கணபதி, சங்கனூர் ரோடு, காமராஜபுரம் ஆகிய கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டு வருவதையும், சிங்காநல்லூர், SIHS காலனி பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் பணிகளில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுவதையும் பறக்கும் படையுடன் மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.