நிவாரண நிதிக்கு 50 ஆயிரம் வழங்கிய அரிமா பாஸ்கரன்

கோவை நேரு நகர் அரிமா சங்கத்தின் முன்னாள் வட்டாரத் தலைவர் பாஸ்கரனின் தாயார் பழனியம்மாள் வேண்டுகோளுக்கிணங்க முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 50 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் அரிமா பாஸ்கரன் வழங்கினார்.

இவருடன் இவரது மனைவி பரிமளம், மகன் ஹரிஷ் நேரு நகர் அரிமா சங்கத்தின் செயலாளர் அரிமா செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு சுமார் 100 முக கவசம் வழங்கப்பட்டது.