குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான தொடர் ஓட்டம்

சி.எம்.எஸ். வித்யா மந்திர் கல்வி நிறுவனம் கோவை மணியக்காரன் பாளையத்தில் கடந்த 23 வருடங்களாக சிறப்பான முறையில் கல்விச் சேவையாற்றி வருகிறது. மாணவர்களுக்குக் கல்வி புகட்டுவதோடு மட்டும் நின்றுவிடாமல் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. தற்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலையும் வளமான எதிர்காலத்தையும் உருவாக்குவது நம் சமூகத்தின் கடமை என்பதைக் கருத்தில் கொண்டு “குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான தொடர் ஓட்டம் 2020″யை 23/02/2020 அன்று காலை 5.30 மணிக்கு நடத்தத் திட்டமிட்டுள்ளது. போட்டியில் பங்குபெறும் நபர்கள் 18/02/2020 அன்று வரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் 13/02/2020 வரை முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய மேலாடை(T-SHIRT) இலவசமாக வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். விழிப்புணர்வு ஓட்டப் போட்டியை கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் எல்.பாலாஜி சரவணன் (சட்டம் – ஒழுங்கு) கொடியசைத்து துவக்கி வைக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.