ஸ்லைஸ் பிராண்டின் புதிய விளம்பர தூதராக நயன்தாரா நியமனம்

கோடை காலம் துவங்க உள்ள நிலையில், சுவையான மாம்பழச்சாறு என்றாலே அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்ற பிராண்டாக திகழும் ஸ்லைஸ் குளிர் பானத்தின் புதிய விளம்பர தூதராக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

மாம்பழச் சுவையை விரும்பும் நுகர்வோர் இடையே தங்களின் உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஸ்லைஸ் நிறுவனம் நயன்தாராவுடன் இணைந்து வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்த உள்ளது.இந்தியாவில் பல ஆண்டுகளாக அனைத்து காலங்களிலும் பெரும்பாலான வீடுகளிலும் மாம்பழத்தின் மீதான ஆசையை தணிப்பதற்கான சரியான மற்றும் மிக விரும்பப்படும் குளிர்பானமாக ஸ்லைஸ் தனக்கென ஒரு நிலையான ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.

இதேபோல் இந்திய சினிமாத்துறையில் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் சிறந்த நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகையாக நயன்தாரா இருந்து வருகிறார். இந்த நிலையில் வரவிருக்கும் கோடை காலத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் ஸ்லைஸ் உடன் நயன்தாரா இணைந்து இருப்பது ரசிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து நடிகை நயன்தாரா தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கையில், ஸ்லைஸ் குடும்பத்தில் நானும் இணைந்து இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இந்த பிராண்டின் விளம்பர தூதராக இணைந்திருப்பது எனக்கு உற்சாகத்தை தருகிறது. பல்வேறு விளம்பரங்களில் நடித்திருக்கும் நான், இந்த பிராண்டின் விளம்பர தூதராக இணைந்து இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஸ்லைஸ் மற்றும் டிராபிகானா, பெப்சிகோ இந்தியா நிறுவனத்தின் இணை இயக்குனர் அனுஜ் கோயல் கூறுகையில், ஸ்லைஸ் குடும்பத்திற்கு நயன்தாராவை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், தனது சிறப்பான நடிப்பால் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற நடிகையாக திகழும் அவர் எங்களுடன் இணைந்து இருப்பதன் மூலம், அது எங்கள் பிராண்டிற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

எங்களின் ஸ்லைஸ் பிராண்டும், நயன்தாரா ஆகிய இருவரும் குடும்பங்களை மகிழ்வித்து மக்களை அன்பான முறையில் ஒன்றிணைத்துள்ளனர். இந்த மாயாஜாலம் அவரின் இனி வரவிருக்கும் புதிய படங்களிலும் தொடரும், அவை அனைவராலும் விரும்பப்படும் என நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.