ஸ்ரீ ராமகிருஷ்ணா  பொறியியல் கல்லூரியில் ரோபோட்டிக்ஸ் கண்காட்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான ரோபோட்டிக்ஸ் பயன்பாடுகள் பற்றிய கண்காட்சி நடைபெற்றது.

நிகழ்வில் கல்லூரி முதல்வர் அலமேலு தலைமை வகித்தார். ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் துறை தலைவர் முருகராஜன் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக விப்ரோ பாரி நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் அனில் தேசிங்கே மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறைத் தலைவர் சைத்தான்ய சிந்தே ஆகியோர் கலந்துகொண்டு கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

இதில் பல்வேறு மாநிலங்களின்  பள்ளி, பாலிடெக்னிக் மற்றும்  கல்லூரிகளைச் சேர்ந்த 400 மாணவ மாணவிகள் குழுவாக பிரிந்து இன்னோ வேட் – எயிட்- ஹப், ப்ராஜெக்ட் எக்ஸ்போ (சீனியர் மற்றும் ஜூனியர்), லைன் ஃபாலோவர் (சீனியர் மற்றும் ஜூனியர்,ரோபோ ரேஸ், ரோபோ சாக்கர், ட்ரோன் ரேஸ் மற்றும் வினாடி வினா என பல்வேறு ரோபோ நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகத் தேர்வு செய்யப்பட்டன.

ப்ராஜெக்ட் எக்ஸ்போவில் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்( ஐ ஓ டி) அடிப்படையிலான ரோபோ அமைப்புகள், அக்வாபோட், ரோவர் மற்றும் யூ எ வி ட்ரோன்கள் உட்பட பல்வேறு ரோபோக்கள் இடம்பெற்றன, ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷனில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியாவின் விப்ரோ பாரி நிறுவனம் சிறந்த திறமையாளர்களை அங்கீகரிப்பதற்காக இரண்டரை லட்சம் ரூபாய் இவ்விழாவுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்தது  குறிப்பிடத்தக்கது.

சிறந்த படைப்புகளுக்கு, சான்றிதழ்களும் பரிசுகளும்  வழங்கப்பட்டன. இதில் துணை முதல்வர் கருப்புசாமி, துறைத் தலைவர்கள்,  கல்லூரி பேராசிரியர்கள்  மற்றும்   பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து  கொண்டனர்.