ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

நிகழ்விற்கு  மருத்துவ இயக்குநர் ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளர் அழகப்பன் ஆகியோர் உடனிருந்து, ஆம்புலன்ஸ் ஆபரேட்டர்களின் பங்கு குறித்து விளக்கினர். அவசர சிகிச்சைப் பிரிவு ஆலோசகர் மஞ்சநாதன், மிகப்பெரும் விபத்தின் ஆரம்பக் கால நிலையைக் கையாளும் முறை பற்றியும் நோயாளிகளின் மருத்துவ  உதவி தேவையின் அவசரத்திற்கு ஏற்ப வரிசைப்படுத்துதல் பற்றி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு விளக்கினார்.

மேலும், அவசர சிகிச்சைப் பிரிவு ஆலோசகர் பார்த்திபன் “கோல்டன் ஹவர்”-ன் உடனடி மருத்துவ உதவியின் அவசியம், அடிப்படை உயிர்காக்கும் நுட்பங்கள் மற்றும்  விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முறையான  மருத்துவ உதவி போன்ற செயல்முறைகளின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார்.

இதில் கோவையில் உள்ள சுமார் 70 ஆம்புலன்ஸ் ஆபரேட்டர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.