டாக்டர் என்.ஜி.பி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் ‘பொங்கல் விழா’ கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்விற்கு கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர். நல்ல ஜி. பழனிசாமி பங்கேற்றுப் பொங்கல் விழாவைத் தொடங்கி வைத்தார். கல்லூரி செயலாளர் டாக்டர் தவமணி டி. பழனிசாமி தலைமை தாங்கினார். முதல்வர் பிரபா வாழ்த்துரை வழங்கினார்.
பொங்கல் விழாவானது கிராமிய முறைப்படி நடந்தது. விழாவைச் சிறப்பிக்கும் வகையில் மாணவர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து வந்தனர். பாரம்பரிய கலை வடிவங்களைக் கொண்டாடும் வகையில் மாணவர்களுக்கு இடையேயான ரங்கோலி போட்டியை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. தொடர்ந்து, ‘உரி அடித்தல்’ விளையாட்டுப் போட்டியும் இடம்பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.