வி.எல்.பி கல்லூரியில் விரிவுரையாடல் நிகழ்வு 

வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பாக “சமூக அறிவியலில் ஆராய்ச்சி” என்னும் தலைப்பில் விருந்தினர் விரிவுரை நடைபெற்றது.  நிகழ்விற்குக் கல்லூரி முதல்வர் சதீஷ்குமார் தலைமை வகித்தார்.

கோயம்புத்தூர் அசைல் திட்டங்களின் உரிமையாளர் சிவப்பிரகாஷ்  காளிமுத்து சிறப்புரை வழங்கினார். அவர் தனது உரையில், சமூக அறிவியல் ஆராய்ச்சி நல்ல சமூக முன்னேற்றத்திற்கு எவ்வாறு வழி வகுக்கும் என்றும், சமூகப் பொருத்தமும் சமகாலத் தன்மையும் ஆராய்ச்சி நோக்கத்தில் இடம்பெற வேண்டும் என்றும் ஆராய்ச்சியின் கட்டமைப்பு, பகுப்பாய்வு குறித்த விளக்கங்களைத் தெளிவுபடுத்தினார்.