பேரூராட்சி செயல்களை தடுக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், கோட்டூர் பேரூராட்சி மூலம் விவசாய நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதை தடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, ஆனைமலை பகுதி கோட்டூர் மலையாண்டி பட்டினம், மதிப்பாதை வழிதடத்தில் கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களாக அப்பகுதியிலுள்ள விவசாய நிலம் மற்றும்  நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டுகின்றனர். இது தமிழக அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத வகையில் உள்ளது.

இது சம்மந்தமாக நேரில் ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர் குப்பைகொட்டக் கூடாது என கூறியும் பேரூராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுகின்றனர். இதனால் விவசாயம், நீர்நிலைகள், கால்நடைகள் ஆகியவை பாதிப்படுவதோடு பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய செயல்களை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும்.