உலக பொருளாதார உச்சி மாநாடு

சென்னையில் நடைபெற்ற உலக பொருளாதார உச்சி மாநாடு மற்றும் பத்தாவது உலகத் தமிழர் பொருளாதார மேனாள் மாவட்ட நீதிபதியும், தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் முழு நேர உறுப்பினருமான அ. முகமது ஜியாவுதீன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், மொரீசியஸ் நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் மேதகு டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் டாக்டர் அருள், டாக்டர் வி. ஜி. சந்தோஷம், டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத், சிவகாமி ஐ.ஏ.எஸ்.அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் டாக்டர் விஜய ஜானகிராமன், அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த டாக்டர் கலைமதி, தமிழ்நாடு திறந்து நிலை பல்கலைக்கழகத்தின் இயக்குனர் டாக்டர் எஸ்.பாலசுப்பிரமணியம், வலை தமிழ் ஊடகத்தின் தலைவர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.