நூறாண்டு பயணத்தில் கோட்டா கோல்டு நிறுவனம் 

கோட்டா கோல்டு நிறுவனத்தின்,  நூறாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கோவை நகர மக்களுக்குச் செய்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோட்டா கோல்டு நிறுவனத்தின் நிர்வாகி பிரபஞ்சு கோட்டா,  செந்தில்குமார் மற்றும் கவிதா ஆகியோர் தெரிவித்தனர்
அவர்கள் பேசுகையில், கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள கோட்டா கோல்ட் நிறுவனத்தின் நூற்றாண்டு முன்னிட்டு (1924–2024) நவ இந்தியா, வாகமான் கோட்டா இடத்தில் ஞாற்றுக்கிழமை பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவிற்கு பிரிக்கால் நிறுவனத்தின் தலைவர் வனிதா மோகன் மற்றும் கே.பி.ஆர். குழுமத்தின் தலைவர்  இராமசாமி  ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர்.
தொடர்ந்து ஜனவரி 09.01.2024 ஆம் நாளில் நிறுவனர் நாள் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் முதியோர்களைக் கௌரவிக்கும் வகையில் பரிசுகள், ஏழ்மை நிலையில் உள்ள முதியோர்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் மருத்துவ பரிசோதனைகள் வழங்கிடவும் புற்றுநோய் போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளும் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
நூற்றாண்டை முன்னிட்டு கோவை மாநகரின் மக்களுக்கும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் பல்வேறு சலுகைகளும், திட்டங்களும் அறிமுக படுத்தப்பட்டுள்ளது. கோவை மக்கள் மனம் மகிழ மரக்கன்றுகள் நடும் திட்டமும், மருத்துவ முகாம் மூலம் பொது மருத்துவம் பராமரிப்பு இல்லாத சிறு கோவில் ஒன்றை பராமரிக்கவும், ஏழை குழந்தைகளின் படிப்பு தேவைக்கு நோட், புத்தகம் வழங்கவும், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடும், மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்விக்கு உதவிடவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
நூறாண்டு பயணம்!
1924 ஆம் ஆண்டில் திருவாளர் பி.ஆர். நடராஜ் செட்டியார், பி.ஆர்.என். ஜுவல்லரி என்ற நகைக் கடையை பெரிய கடைவீதியில் துவக்கினர். அதன் பின்னர் துருக்குமாரின் அயராத உழைப்பால் ராஜவீதியில் கோட்டா ஜுவல்லரி என்ற பெயரில் தங்க கடையாக உருவெடுத்தது.  அதனை  தொடர்ந்து செந்தில்குமாரின் கடின உழைப்பால் இன்று கோட்டா கோல்டு திறம்படச் செயல்படுகிறது.
பி.ஆர்.என். ஜுவல்லரி மற்றும் கோட்டா ஜுவல்லரி பல்வேறு இடங்களுக்கும், மாநிலத்திற்கும் மொத்த விலையில் தங்க நகைகள் செய்து பெரும் தொழில் முன்னேற்றத்தை உருவாக்கினர்.  பாரம்பரிய நிறுவனமாக எங்களது பயணம் நூறாவது ஆண்டில் சேவையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்