கோவை சாய்பாபாகாலனியை அடுத்த கே.கே புதூரில் உள்ள அரசு பள்ளி மைதானத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவரான ஆவுல் பக்கீர் ஜெயனலாபுதின் அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது புகைப்படங்களை வைத்து கொண்டாடினர். இதில் அதிமுக முதல் துணை மேயரான சங்கனூர் வேலுச்சாமி அவர்களின் தலைமையில் அப்துல்கலாம் அவர்களின் படத்திற்கு மலர் தூவி வணங்கிய பின் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். இதை தொடர்ந்து டெல்டா கிருஷ்ணமூர்த்தி, குழைந்தைசாமி பொதுமக்கள், குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆடி மகிழ்ந்து கொண்டாடினர்.