எஸ்.டி.சி.கல்லூரியில் ஜூன் 20 அகில இந்திய மேலாண்மை துறை மாநாடு

திப்பம்பட்டி சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் அகில இந்திய மேலாண்மை துறை மற்றும் புலத்தலைவர்கள் இயக்குநர்கள் மாநாடு, வரும் 20 ம் தேதியன்று நடைபெற உள்ளது. இம்மாநாடு இந்திய மேலாண்மை கல்லூரிகள் குழுமத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.

இம்மாநாட்டில் மேலாண்மை கல்வியில் புதிய கல்விக் கொள்கையின் தாக்கம் மற்றும் பாடத்திட்டத்தினைப் உருவாக்கும் போது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இந்த மாநாடு நான்கு தனித்தனி அமர்வுகளாக பிரிக்கப்பட்டு இந்தியாவின் 100 க்கும் மேற்பட்ட தலைசிறந்த கல்லூரியாளர்கள், துணை வேந்தர்கள், மேலாண்மை கல்லூரியின் இயக்குநர்கள், புலத்தலைவர்கள் மற்றும் மூத்த பேராசிரியர்கள் பங்கு பெற உள்ளனர்.

மாநாட்டு ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சோமு மற்றும் முதன்மை இயக்குநர் நந்த கோபால் ஒருங்கினைக்கின்றனர்.

 

Source: Press Release