கேரளாவுக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு, லாரி ஒன்றில் அரிசி கடத்தப்படுவதாக, நேற்றிரவு மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையில், எஸ்.ஐ.,கவியரசு, எஸ்.எஸ்.ஐ., கதிரேசன், போலீசார் குமரேசன் ஆகியோர், மதுக்கரை மரப்பாலம் அடுத்து பெட்ரோல் பங்க் அருகே, கோவை – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்

அவ்வழியே வந்த கேரள பதிவெண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, 10 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்து, இதனை தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு லாரி கொண்டு செல்லப்பட்டது.

விசாரணையில் அந்த லாரி சுந்தராபுரம் பகுதியிலிருந்து, கஞ்சிக்கோட்டுக்கு கடத்திச் செல்வதும் தெரியவந்தது. தொடர்ந்து பாலக்காடு மாவட்டம், நல்லபிள்ளி, நீலிப்பதனை சேர்ந்த டிரைவர் ராமகிருஷ்ணன், 39 கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.