ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, கேப்ஜெமினி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் பெங்களூர் கேப்ஜெமினி நிறுவனத்துடன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பன்னாட்டு பொறியியல் துறை மற்றும் தகவல் தொழிநுட்பத் துறை சேர்ந்த கேப்ஜெமினி, சுமார் இரண்டரை லட்சம் பொறியியல் வல்லுனர்களை உலகம் முழுக்க கொண்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேப்ஜெமினியின் பொறியியல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் நிர்வாக இயக்குனர் சந்திரா ரெட்டி கையெழுத்திட்டார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஆராய்ச்சியில் ஈடுபடும் பேராசிரியர்களும் மாணவ மாணவியர்களுக்கு இன்டர்நெட் ஆஃ திங்ஸ், உள்பதிக்கப்பட்ட அமைப்பு, இண்டஸ்ட்ரி 4.0, மென்பொருள் பொறியியல் துறை எனப் பல்வேறு துறைகளில் தங்களின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் யுக்தியை வளர்த்து கொள்ளலாம்.

மேலும், கல்லூரியின் இயந்திரவியல் துறை, தகவல் தொழிநுட்பத் துறை கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, வானூர்தியில் துறை, மின்னணு மற்றும்  தகவல் தொடர்பு துறை, ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் துறைகள் ஒருங்கிணைந்து, பல்வேறு விதமான தொழில்துறை இணைப்புடன் கூடி நிதி உதவி  ஆராய்ச்சி செய்ய மிகவும் பயனுள்ளதாக அமையுமாறு களங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர் சன்ஸ் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தார். கல்லூரி முதல்வர் என்.ஆர்.அலமேலு, துறைத் தலைவர்கள், கல்லூரியின் தொழில்துறை மையத்தின் தலைவர் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.