தமிழ்நாடு வேளாண் பல்கலையில் அடுமனைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் அடுமனைப் பொருட்கள் தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சி வரும் நவம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த அடுமனைப் பொருட்கள் தொழில்நுட்பங்கள் சிறுதொழில் முனைவோருக்கு தங்களது வருமானத்தைப் பெருக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

ரொட்டி வகைகள், கேக் மற்றும் பிஸ்கெட், பப்ஸ், கட்லெட், சமோசா ஆகியவை எளியமுறையில் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த தொழிநுட்பத்தில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ரூ.1500+18% ஜி.எஸ்.டி முதல் நாளன்று செலுத்தி பயிற்சியில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு: 0422 – 6611268