வாக்குகள் வாங்கப்பட்டுள்ளது – கிருஷ்ணசாமி பேட்டி

தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும் பணப்பட்டுவாடா செய்யபட்டு வாக்குகள் வாங்கப்பட்டுள்ளது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோவையில் செய்தியாளர்களிடம் இன்று (30.4.2021)பேட்டி அளித்துள்ளார் .

பேட்டியில் அவர் கூறியதாவது: தமிழகத்தில், கடந்த 70 ஆண்டுகளில் இது வரை இல்லாத அளவுக்கு, பணப்பட்டுவாடா இந்த  சட்ட மன்ற தேர்தலில்,  நடைபெற்றுள்ளது எனவும்,  பணம் வாங்கி வாக்குகளை வாங்கிய பின்னர், மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையாது, மக்களுக்கான  அரசாக செயல்படாது. எனத் தெரிவித்தார்.

இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் சார்பில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு  புகார் அளித்தும், தேர்தல் ஆணையம் எந்த விதமான பதிலையும் அளிக்க வில்லை. இதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ததும்,  இது தொடர்பான வழக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது, முறையாக இந்த வழக்கை  விசாரணை மேற்கொள்ளாமல், இது, அற்ப காரணமாக, விளம்பரத்திற்காக செய்யபட்ட, வழக்கு, என இதனை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை உள்ள காரணமாக இந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் விட்டு  விட்டனர் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதனை புதிய தமிழகம் கட்சி ஒரு போதும், ஏற்று கொள்ளாது, எனவும், உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர  இருப்பதாக தெரிவித்துள்ளார்.