ஈஷா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் – சத்குரு

ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக  உபயோகித்து கொள்ளுங்கள் என   ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை, 990 படுக்கை வசதியுடன் கூடிய கோவிட் மையங்களாக பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசுக்கு கொடுக்கிறோம். இந்த சவாலிலிருந்து வெளிவர நம் சமூகம் ஒன்றிணைந்து நிர்வாகத்தின் கரங்களை பலப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்  கோவை, ஈரோடு, சேலம், நாகர்கோவில், தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி ஆகிய  மாவட்டங்களில்  ஈஷா  அறக்கட்டளையின்  பள்ளிகள் உள்ளன. இவை அனைத்தையும்  கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றினால் சுமார் 1000 பேருக்கு  சிகிச்சை அளிக்க முடியும். தேவை ஏற்படும் பட்சத்தில் மேலும் 200-300 படுக்கைகள் போடவும் முடியும்.

சத்குரு வரைந்த ஓவியங்களை ஏலம் விட்டதன் மூலம் கிடைத்த சுமார் 12 கோடி ரூபாயை சென்ற ஆண்டு கொரோனா தடுப்பு பணிகளுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.