பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இரு சக்கர வாகனம் மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் பேரணி இன்று (27.4.2021)நடைபெற்றது.
கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் விதமாக கோவை ராகுல் அகாடமி ரோலர் ஸ்கேட்டிங்,வெஸ்டர்ன் கேட்ஸ் ஹார்லி டேவிட்சன் பைக் கம்பெனி,ரோட்ரேட் கிளப் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் எலைட் இணைந்து கோவை அவினாசி சாலையிலுள்ள வெஸ்டன் ஹார்லி டேவிட்சன் பைக் ஷோரூம் முன்பு ரோலர் ஸ்கேட்டிங் மற்றும் இருசக்கர வாகன பேரணி தொடங்கி கொடிசியாவில் முடிவடைந்தது.
இதில் 30க்கும் மேற்பட்ட ஹார்லி டேவிட்சன் பைக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை வைத்து கொண்டு சென்றனர். மற்றும் 20க்கும் மேற்பட்ட ரோலர் ஸ்கேட்டிங் வீரர்களும் பங்கு பெற்றனார்.
வருகின்ற காலங்களில் கோவையிலுள்ள அனைத்து சாலைகளிலும் இதேபோல் விழிப்புணர்வு பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளதாக கோவை ராகுல் அகாடமி ரோலர் ஸ்கேட்டிங் உரிமையாளர் மற்றும் பயிற்சியாளருமான ராகுல் பாண்டியன் தெரிவித்தார்.