ரூ.60.58 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சியில் இன்று (16.10.2020) ரூ.7 கோடி மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி, ரூ.3.47 கோடி மதிப்பில் படகு இல்லம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, புதிதாக கட்டப்பட்டுள்ள அம்மா கூட்டரங்கம், ரூ.48 இலட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட சமுதாய கூடத்தை திறந்து வைத்து, 683 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.60.58 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் கிருஷ்ணகுமார் பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன், மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியசேது, வால்பாறை நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.