ஒரே நாளில் முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற வழக்குகளில் 79 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் வசூல்

கோவையில் நேற்று மட்டும் முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்றவில்லை என 355 வழக்கின் மூலம் 79 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகரில் கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை கடை பிடிக்காதவர்களுக்கு கோவை மாநகர போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் கோவை மேற்கு பகுதியில் 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 23 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது. கோவை மத்திய பகுதியில் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 8000 தெற்குப் பகுதியில் 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 27,000 கிழக்குப் பகுதியில் 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 20,800 அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த வகையில் மொத்தம் 355 வழக்கின் மூலம் ரூபாய் 79 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது கோவை மாநகர போலீசார் தெரிவித்தனர்.