சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உத்யாம் பதிவுசெய்து கொள்ளலாம்

கோவை மாவட்டத்தைச் சார்ந்த சிறு, குறுமற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்தங்களது நிறுவனத்தை உத்யாம்பதிவுஇணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறைகளை மத்திய அரசு ஜூலை 1 முதல் இந்தியா முமுவதும் மாற்றி அமைத்துள்ளது.

அதன்படி தற்போது இயங்கி வரும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கான சான்றை புதிய உத்யாம் பதிவு இணையதள முகவரியில் (www.udyamregistration.gov.in)  சுய உறுதி மொழியுடன் பதிவு செய்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த இணையதளத்தின் மூலம் பெறப்படும் சான்றிதழ் உத்யாம் பதிவு சான்றிதழ் என்றும் இந்த பதிவு எண் உத்யாம் பதிவு எண் என்றும் அழைக்கப்படும்.

நிறுவனத்தின் இயந்திர தளவாட மதிப்பு மற்றும் மொத்த விற்பனை அளவு வருமான வரி தாக்கல் மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

புதியதாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு சுய உறுதி மொழியின் அடிப்படையில் இயந்திர தளவாட மதிப்பு மற்றும் மொத்த விற்பனை அளவு அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும்.ஏற்கனவேதொழில்முனைவோர் பதிவுசெய்தநிறுவனங்கள்உத்யாம் பதிவு இணையதளத்தில் 2021 மார்ச் 31க்குள்பதிவு செய்து கொள்ள வேண்டும்.2020 ஜூன் 30க்கு முன் பெற்ற உத்யோக் ஆதார் மொமோரண்டம் மற்றும் தொழில் முனைவோர் ஒப்புகை பகுதி 2ஆகியன 2021 மார்ச் 31வரை மட்டுமே செல்லத்தக்கதாகும்.

எனவே, கோவை மாவட்டத்தைச் சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தை உத்யாம் பதிவு இணையதளத்தில் (www.udyamregistration.gov.in) பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.