மரியா மான்ட்டசரி…

இனிமை, எளிமை நிறைந்த புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்திய இத்தாலி மருத்துவரும், கல்வியாளருமான மரியா மான்ட்டசரி (Maria Montessori) பிறந்த தினம் (ஆகஸ்ட் 31). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:

இத்தாலியின் கிராவல்லே நகரில் கற்றறிந்த நடுத்தரக் குடும்பத்தில் (1870) இவர் பிறந்தார். பின்னர் ரோம் நகருக்கு குடும்பம் குடிபெயர்ந்தது. பெண் கல்விக்கான முக்கியத்துவமும், வாய்ப்புகளும் குறைவாக இருந்ததால் ஆண்களுக்கான தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார்.
பெண் என்பதால் மருத்துவப் படிப்பில் சேர அனுமதி மறுக்கப்பட்டது. போப் 13-ம் லியோவின் சிபாரிசுடன் ரோம் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் 1896-ல் சேர்ந்தார். மருத்துவப் படிப்பில் சிறப்பாகத் தேர்ச்சியடைந்து, இத்தாலியின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார். பல்கலைக்கழக மருத்துவமனையில் மருத்துவராக நியமிக்கப்பட்டார்.

குழந்தைகள் நலன், உளவியலில் அதிக கவனம் செலுத்தினார். சான் லாலென்சோ நகரில் ஏழைத் தொழிலாளர் குழந்தைகளின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். குழந்தைகளின் இயல்பான உளவியல் பண்புகளுக்கு ஏற்ப, சுதந்திரமான சூழலில் அவர்களுக்குக் கல்வி அளிக்கும் முறையை மேம்படுத்தினார்.
நோட்டுப் புத்தகங்களுக்கு பதிலாக பொம்மை, வண்ண அட்டை, ஒலி எழுப்பும் கருவிகள், ஓவிய, வண்ணத்தாள்கள், புட்டிகள் போன்றவற்றைக் கொண்டு, கற்றலை சுவாரஸ்யமாக மாற்றினார். குழந்தைகளும் பாடங்களை எளிதாகக் கற்றனர். இது உலகெங்கும் பரவியது.
அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகள் அழைப்பு விடுத்தன. அங்கெல்லாம் சென்று இந்த புதிய கல்வி முறை குறித்து விளக்க உரை நிகழ்த்தினார். உலகம் முழுவதும் சிறுவர் கல்வி முறையில் ஒரு புதிய உளவியல் புரட்சி மலர்ந்தது.
கற்பித்தல் குறித்து ரோம் பல்கலைக்கழகத்தில் பயின்றார். சுமார் 200 ஆண்டுகளின் கல்வி முறை குறித்து ஆராய்ந்தார். பல நூல்களை எழுதினார். பல்வேறு இடங்களில் இவர் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டும் நூல்கள் வெளியாகின.
புதுமைக் கல்வித் திட்டத்துக்கான கோட்பாடுகளை 1897-ல் உருவாக்கினார். குழந்தை பிறந்தது முதல் 3 வயது வரை, 3-6 வயது, 6-12 வயது, 12-18 வயது என அவரவருக்கு ஏற்ற கல்வி முறைகள் குறித்து பகுப்பாய்வு செய்தார்.

தனது புதிய கல்வி முறையின் அடிப்படையில் ரோம் நகரில் 1907-ல் முதல் வகுப்பைத் தொடங்கினார். இது ‘மான்டிசோரி கல்வி முறை’ என பிரபலமடைந்தது. அமெரிக்காவில் 1925-ல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மான்டிசோரி பள்ளிகள் தொடங்கப்பட்டன. தன் வாழ்நாள் முழுவதும் இந்த கல்வி முறையை மேம்படுத்தி வந்தார்.
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் கற்கும் திறனையும் மேம்படுத்தினார். 1939-ல் இந்தியாவுக்கு வந்த இவர் 8 ஆண்டுகள் தங்கியிருந்து ஏராளமான ஆசிரியர்களுக்கு மான்டிசோரி முறையில் பயிற்சி அளித்தார். பல மாநாடுகளில் பங்கேற்றார். ‘இந்தியா என் 2-வது வீடு’ என்பார்.
இனிமை, எளிமை, உற்சாகம் நிறைந்த கல்வி முறையை அறிமுகப்படுத்தி, அதன்மூலம் குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்திய மரியா மான்டிசோரி 82-வது வயதில் (1952) மறைந்தார்.
இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண் மற்றும் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கியா
மரியா மான்ட்டசரி…

மரியா மான்ட்டசரி… ஆகஸ்ட் 31, 1870 தொடக்கம் மே 6, 1952 வரை வாழ்ந்தார். இவர் இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கி ஜனவரி 6,1907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார்.
மாண்டிசோரி முறைக் கல்வி
இவரது முறையைப் பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டைவிட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழுவதும் பயன்படுத்த துவங்கினர். நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார். பின்னாளில் 1939 முதல் 1947 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினார்.
இந்தக் கல்வி முறை குழந்தைகள் தாமாக முன்வந்து செயல்படுவதற்கும், தனது தேவைகளைத் தானே செய்து கொள்ளவும் வழி செய்கிறது.

இந்த முறையில் நடக்கும் வகுப்புகளில் ஆசிரியர்கள் இல்லை, மாறாக அவர்கள் வழிநடத்துபவர்கள் என்றே கருதப்படுகிறார்கள்.
குழந்தைகள் புதியவற்றைத் தாமாக முன்வந்து ஆர்வமுடன் கற்றுக் கொள்ளவும். அவர்கள் தவறான பழக்கங்களை கற்றுக் கொள்ளாமலும், குழந்தைகளின் முயற்சிகள் வீணாகிப் போகாமலும் பார்த்துக் கொள்வதே இந்த வழிநடத்துபவர்களின் (ஆசிரியர்களின்) பணி. இவரது மிகச்சிறந்த புத்தகங்கள் “The Absorbent Mind”, “The Discovery of the Child”.