மனிதனைக் கொல்வது நோயா? பயமா?

1. பாமர மனிதனைவிட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?

2. அடுப்புப் புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரெட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்?

3. கள்ளச்சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்?

4. தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தைத் தேய்த்துவிட்டு வேலையைத் தொடர்பவன் எங்கே? எறும்புக் கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே?

5. நெல் அறுவடை செய்யும்போது விரல் அரிவால்பட்டு வெட்டிவிட்டால் கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழித்ததற்கு ஆன்டிபயோடிக் இட்டு கட்டு போடுபவன் எங்கே?

6. அழுக்கு மணலில் விழுந்து பிரண்டு விளையாடிய குழந்தையைவிட மணலையேத் தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏன்?

7. உண்ட கையோடு ஓடிவந்து பிரசவம் பார்த்து ஆரோக்கிய குழந்தையை அள்ளிக் கொடுத்த கிழவிகளின் கையைவிட ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு அறுவை சிகிச்சை செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்?
ஏன்? ஏன்? ஏன்?

காரணம், மிக சிறிது. இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று.
நோயைப் பற்றிய அதிக அறிவோடு இருப்பது மற்றொன்று.
எங்கள் கிழவிகளுக்கு தெரிந்தது எல்லாம் தலைவலி, நெஞ்சுவலி, வயிறு வலி, கை கால் வலி அவ்வளவுதான்.
ஆனால், எதிர்காலத்தில் உடம்பில் உள்ள 6,000 கோடி செல்களுக்கும் தனித்தனியே மருத்துவம் பார்க்கப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மனிதனின் ஆயுள் அதிகபட்சம் முப்பதாக குறைந்துவிடும்.
அதற்கு சாட்சியாக இப்போது கொரோனா. மருந்தில்லா நோய்த் தொற்று. இப்போது மற்ற நோய்கள் எங்கே போயின என்று தெரியவில்லை. அண்ணன் கொரோனா இருக்கும்போது இங்கே நமக்கென்ன வேலை என்று எல்லாம் பூமியைத் தாண்டிப் போய்விட்டனவா?

எந்த நோயும் மனிதனைக் கொல்வதில்லை. அதைப்பற்றிய பயம்தான் அவனைக் கொல்கிறது. இயற்கை தனது கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் மீறுவதில்லை. பாருங்கள்.. இயற்கை இப்போது நல்ல எழிலோடு இருக்கிறது. மனிதன் செய்த அனைத்துத் தவறுகளும் இப்போது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிட்டன.
உடலை அதன் போக்கில் விட்டுவிட்டு உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அது எதற்காக வடிவமைப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்.
என்னைப் பொருத்தவரை எவர் ஒருவர் இயற்கையோடு ஒத்துப்போய், அதாவது மனமும், உடலும் இணைந்து செயல்படுகிறதோ அவர்களுக்கு நோய்களும் வருவதில்லை, அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் குணமாகிவிடும்.
நல்ல மழையில் நனையுங்கள், பயந்து ஓடி ஒளியாதீர்கள்.
வெயிலைக் கண்டு அச்சப்படாதீர்கள், காற்றைக் கண்டு பயப்படாதீர்கள்,

குளிரில் ஸ்வெட்டர் போட்டு பதுங்காதீர்கள், சுடுதண்ணீரில் ஒருபோதும் குளிக்காதீர்கள், சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரிடம் செல்லாதீர்கள், இப்படி வாழ்ந்து பாருங்கள், நோய் எதிர்ப்பு சக்தி கூடும். வாழ்வே இனிமையாகும்.
வாழ்க வளமுடன்.