ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் சொர்க்க வாசல் திறப்பு

மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பீளமேடு பகுதியில் உள்ள ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அதிகாலை 4.15 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் காட்சியளித்தார்.

மேலும் இந்த சொர்க்க வாசல் திறப்பை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர்.