மாபெரும் இலவச மருத்துவ முகாம்

மதுக்கரை, குரும்பபாளையம் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா திருக்கோவிலின் 2 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கே.எம்.சி.எச். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருக்கோவிலின் நிர்வாகமும் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கோவிலின் தியான மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், கண், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மற்றும் மகளிர் மகப்பேறு மருத்துவர்கள் கலந்துகொண்டு இலவச ஆலோசனை, மருத்துவ பரிசோதனை செய்தனர்.