மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் அஜித்

கோயம்பத்தூரில் நடைபெற்று வரும் மாநில அளவிலான 45-வது துப்பாக்கிச் சூடு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். நடிகர் அஜித் நடிப்பது மட்டுமின்றி மற்ற சில விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் ஏரோ மாடலிங், போட்டோகிராபி, ரேஸிங், போன்ற பல  விஷயங்களில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீப காலமாக அஜீத் துப்பாக்கி சுடும் பயிற்சியும் எடுத்து வருகிறார். அதன் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகின.கோயம்பத்தூரில் நடைபெற்று வரும் தமிழ்நாடு அளவிலான 45-வது துப்பாக்கிச் சூடு போட்டியில் பங்கேற்பதற்காக தான் பயிற்சி பெற்றுள்ளார். தமிழ்நாடு சூட்டிங் அசோசியேசன் சார்பாக கோவை காலவர் பயிற்சி மையத்தில் துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் பிரிவில் சென்னை ரைபில் கிளப் சார்பாக நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.