இந்துஸ்தான் கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்வு

இந்துஸ்தான் பொறியியல்  கல்லூரியில் கணினி மற்றும் செமிகண்டக்டர் துறையில் சமீபத்திய போக்குகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்துக் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்விற்குக் கல்லூரி முதல்வர் ஜெயா வரவேற்புரை வழங்கினார். தலைமை விருந்தினராக, பெங்களூரு மைக்ரோசாப்ட் முதன்மை இயக்குநர் ராமகிருஷ்ண ராமா பங்கேற்று, கணினி மற்றும் செமிகண்டக்டர் துறையில் சமீபத்திய போக்குகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பற்றி எடுத்துரைத்தார்.
இதில் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன், கல்லூரி முதல்வர்கள் ஜெயா, நடராஜன் மற்றும் பல்வேறு துறைத் தலைவர்கள்  பங்கேற்றனர்.