கிழக்கு மாமன்ற உறுப்பினர்கள் சார்பில் நிவாரண நிதி

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கிழக்கு மண்டலம் மாமன்ற உறுப்பினர்கள் சார்பாக மிக்ஜாம் புயல் மீட்பு நிவாரண பணிக்கு ரூ.2 இலட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டது. இதனை கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் மற்றும் கிழக்கு மண்டல மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரனிடம் வழங்கினர்.