ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில்  சிறுவர் பூங்கா திறப்பு 

கோவை மாநகர ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட சிறுவர் பூங்காவின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

விழாவிற்கு  மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து, பூங்காவினை திறந்து வைத்தார். இப்பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கான பிளைன் ஸ்லைட், வெவ் ஸ்லைட், டபுள் ஸ்விங், டபுள் சீசா, மேரி கோ ரவுண்டு ஆகிய விளையாட்டு உபகரணங்கள் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த 26.05.2023 ஆம் தேதியன்று கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் சிறுவர் பூங்கா திறக்கப்பட்ட நிலையில், இரண்டாவதாக இன்று மேற்படி புதிய சிறுவர் பூங்காவும் திறக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

இத்திறப்புவிழாவில் கோவை மாநகர ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் சேகர், மோட்டார் வாகனப்பிரிவு காவல் ஆய்வாளர்  கோவிந்தராஜூ, இருபால காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர் பலர் கலந்துகொண்டனர்.