சுகுணா பள்ளியின் ஆண்டு விழா

காந்திபுரம், சுகுணா ரிப் வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா திங்கட்கிழமை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

சுகுணா கல்வி நிலையங்களின் தலைவர் லக்ஷ்மி நாராயணசுவாமி, பள்ளியின் தாளாளர் சுகுணா லட்சுமி நாராயணசாமி ஆகியோர் தலைமை தாங்கினார். அறங்காவலர் ராஜாமணி அம்மாள், நிர்வாக இயக்குனர் அனிஷ்குமார், பள்ளியின் இயக்குனரும், முதல்வருமான ஆண்டனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற முதன்மை வன பாதுகாவலர் கந்தசாமி கலந்துகொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியி்ல் கடந்த கல்வி ஆண்டில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் சாகச விளையாட்டு போட்டிகள், நாடகங்கள், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றது.