ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தையொட்டி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில், உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார். இதில் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு இலச்சினை வடிவில் நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குப் பேரணியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பிரகதீஸ்வரன், பேராசிரியர் சுபாஷினி,  நாகராஜன், சஹானாஃபாத்திமா, பேராசிரியர் பிரவீன் ஆகியோர் செய்திருந்தனர்.