சிலிண்டர் விலை முதல் சிம் கார்டு வரை! புதிய விதிமுறைகள்!

பணம் சார்ந்த பல்வேறு விஷயங்களில் இன்று முதல் நிறைய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. அது என்னென்ன மாற்றங்கள் என்பது பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

தனிநபர்களின் அன்றாட நிதிச் சூழலை பாதிக்கும் வகையில் நிறைய மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்.

ஒவ்வொரு மாதமும் பணம் சார்ந்த நிறைய மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் இன்று தொடங்கியுள்ள டிசம்பர் மாதத்தில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

புதிய விதிமுறைகள்!

சிலிண்டர் விலை!
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 26 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

சிம் கார்டு ரூல்ஸ்!
சிம் கார்டை வாங்குவது மற்றும் விற்பனை செய்வது தொடர்பான விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது. புதிய விதிமுறை இன்று (டிசம்பர் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய விதிமுறைகளின்படி சிம் கார்டு விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களிடம் KYC சரிபார்ப்பு செயல்முறையை கட்டாயம் முடிக்கவேண்டும்.

கிரெடிட் கார்டு ரூல்ஸ்!
கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் வாயிலாக யூபிஐ பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அதாவது, கடந்த ஒரு வருடத்தில் எந்த பரிவர்த்தனையும் செய்யாத யூபிஐ ஐடிகளை தற்காலிகமாக நீக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பென்சன் ஆயுள் சான்றிதழ்!
பென்சன் வாங்கும் மூத்த குடிமக்கள் அனைவரும் தாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதைத் தெரிவிக்க ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பென்சன் பணம் தொடர்ந்து கிடைக்கும். அதைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 30 ஆகும். அந்த அவகாசம் முடிந்துவிட்டது.

கடன் ஆவணங்கள்!
வங்கிகளில் ஆவணங்களை வைத்து கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தியவுடன் ஆவணங்களைத் திருப்பிக் கொடுக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வீட்டு ஆவணங்கள் தொலைந்துவிட்டால் அதை ஒப்படைக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். இந்த விஷயத்தில் வங்கிகளுக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு என்று அபராதமும் விதிக்கப்படுகிறது.

ஆதார் கார்டு அப்டேட்!
இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது முக்கியமான ஆவணமாக உள்ளது. ஆதார் இல்லாமல் இந்தியாவில் எந்தவொரு சலுகைகளையும் பெற முடியாது. அப்படிப்பட்ட ஆதார் கார்டில் இலவசமாக அப்டேட் செய்ய அரசு அவகாசம் வழங்கியிருந்தது. அதற்கான கடைசி நாள் டிசம்பர் 14 ஆகும்.